உத்திரபிரதேச மாநிலம், பரேலி என்ற மாவட்டத்தில் கடந்த 13 மாதங்களில் 9 பெண்கள் ஒரே போல கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. அதிலும் 40 முதல் 65 வயது உட்பட்ட அந்த ஒன்பது பெண்களும் அவர்கள் கட்டியிருந்த சேலைகளை வைத்தே கழுத்தை நெறித்துக் கொள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
கொலைக்கு பின் அவர்கள் அனைவரின் உடல்களும் ஒரே மாதிரியாக கரும்பு தோட்டங்களில் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது. கடந்த வருடம் ஜூன் மாதம் ஒன்றாம் தேதி ஒரு கொலையும், ஜூலை, ஆகஸ்ட், அக்டோபர் மாதங்களில் அடுத்தடுத்த கொலையும், நவம்பர் மாதத்தில் இரண்டு கொலைகளும் அரங்கேறியிருக்கின்றது. எட்டாவது கொலைக்கு பின்னர் தான் போலீசார் இந்த கொலை சம்பவங்கள் அனைத்தும் ஒரே போல் இருப்பதை கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
தற்போது 300 போலீசை கொண்ட சிறப்பு படை 14 குழுக்களாக பிரிக்கப்பட்டு ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து கொலைகள் நடப்பது நின்றுள்ளது. இந்த கொலைகளை செய்த நபரை இன்னும் பிடிக்க முடியவில்லை. அனேகமாக கொலையாளி உள்ளூர் வாசியாக இருக்க வாய்ப்பு இருக்கின்றது என்று போலீசார் சந்தேகப்படுகின்றனர்.
காவல்துறை ரோந்து பணி காரணமாக இந்த கொலைகள் தற்காலிகமாக நின்றிருந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் அனிதா என்கின்ற 45 வயது பெண் சேலையால் கழுத்து நெரித்து கொல்லப்பட்டு அந்த பெண்ணின் உடல் கரும்பு தோட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மீண்டும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.
இது தொடர்பாக உயர்மட்ட காவல் அதிகாரி குழு விவாதித்து கொலையாளிகளை பிடிப்பதற்கான திட்டத்தை உருவாக்கி வருகிறார்கள். உள்ளூர் மக்கள் கூறிய அடையாளங்களின் படி மூன்று பேரில் உருவப்படத்தை வரைந்து, அதன் மூலம் தேடுதலை போலீசார் தீவிரமாக செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.