திருப்பதியில் லட்டுவில் மாட்டிறைச்சி கொழுப்பு கலந்திருப்பதாக வெளியான தகவல் மிகவும் அருவருப்பாக இருந்ததாக சத்குரு தெரிவித்து இருக்கின்றார்.
உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்பட்ட பிரசாதமான லட்டுக்களில் மாட்டிறைச்சி கொழுப்பு மற்றும் பன்றி கொழுப்பு கலந்த நெய்யினால் தயாரிக்கப்பட்டது ஆய்வகத்தில் உறுதி செய்யப்பட்டது. ஆந்திர பிரதேசத்தில் கடந்த ஜெகன்மோகன் ஆட்சியில் குறைந்த விலையில் டெண்டர் விடப்பட்டு காசை மிச்சப்படுத்த இந்த முறைகேடு நடந்துள்ளதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியிருந்தார்.
மாட்டு இறைச்சி கொழுப்பு கலந்த திருப்பதி லட்டு விவகாரம் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சத்குரு ஜக்கி வாசுதேவ் கருத்து தெரிவித்திருக்கின்றார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருந்ததாவது ‘கோவிலுக்கு வரும் பக்தர்கள் மாட்டு இறைச்சி கொழுப்பில் தயாரிக்கப்பட்டதை பிரசாதமாக உண்பது என்பது அருவருப்பானது.
இந்த சம்பவம் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. இதனால் தான் இந்து கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இன்றி பக்தர்கள் கட்டுப்பாட்டில் நடக்க வேண்டும் எனக் கூறுகிறோம். பக்தியில்லாத இடத்தில் புனித தன்மை இருக்காது. பக்தியுள்ள இந்துக்கள் கட்டுப்பாட்டில் இந்து கோவில்கள் இருக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது’ என்று கூறியிருந்தார். மேலும் தமிழகத்தை சேர்ந்த மதகுரு ஜக்கி வாசுதேவ் கோவையில் ஈஷா யோகா மையத்தை நிறுவி ஆன்மீக செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.