கொரொனாவால் மக்கள் முடக்கப்பட்டு வீடுகளில் அடைக்கபப்ட்டுள்ள நிலையில் மூன்று மாதங்களுக்கு எந்தவிதமான EMI களையும் கட்டத் தேவையில்லை என அறிவித்துள்ளார் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ்.
இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் சற்று முன்னர் செய்தியாளர்களை சந்தித்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் நடந்த இந்த சந்திப்பில் அவர் முக்கியமான அறிவிப்புகள் சிலவற்றை அறிவித்துள்ளார்.
சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ள சலுகைகள்
- மூன்று மாதங்களுக்கு எந்தவிதமான மாதத்தவணைகளும் கட்டத் தேவையில்லை
- வங்கிகளுக்கு வழங்கப்படும் ரெப்போ வட்டிவிகிதம் 5.1 ல் இருந்து 4.4 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
- வாகனங்களுக்கான கடன் வட்டி குறைய வாய்ப்பு உள்ளது.
- ரெப்போ வட்டிக் குறைந்ததால் மாதத்தவணை தொகை குறைய வாய்ப்பு