குழந்தையை அச்சுறுத்திய ராஜநாகம்… கடித்தே கொன்ற வளர்ப்பு நாய்… வைரலாகும் வீடியோ…!

குழந்தையை அச்சுறுத்திய ராஜநாகம்… கடித்தே கொன்ற வளர்ப்பு நாய்… வைரலாகும் வீடியோ…!

குழந்தையை அச்சுறுத்திய ராஜ நாகத்தை வீட்டிலிருந்து வளர்ப்பு நாய் கடித்தே கொன்ற வீடியோவானது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகின்றது.

பொதுவாக வீட்டில் வளர்க்கப்படும் பிராணிகள் தங்களது எஜமானர்கள் மீது மிகவும் விசுவாசமாக இருப்பார்கள். அவர்களுக்கு ஏதாவது ஆபத்து என்றால் தன் உயிரையும் கொடுக்க தயங்க மாட்டார்கள். செல்லப் பிராணிகள் தங்களை வளர்ப்பவர்களுக்கு ஏதாவது ஆபத்து என்றால் உடனே தன்னுயிரையும் கொடுத்து விடுவார்கள்.

இது போன்ற பல சம்பவங்களை நாம் பார்த்திருப்போம். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நடந்திருக்கின்றது. உத்தர பிரதேசம் மாநிலம் ஜான்சியிலுள்ள சிவ கணேஷ் காலனியில் ஒரு வீட்டின் தோட்டத்திற்குள் ராஜநாகம் ஒன்று நுழைந்திருக்கின்றது. அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் பாம்பை பார்த்து அலறி ஓட்டம் பிடித்தனர்.

இதை அடுத்து அங்கு பிட்புல் வகையை சேர்ந்த வளர்ப்பு நாய் ஜென்சி குழந்தைகளின் அலறல் சத்தத்தை கேட்டு உடனடியாக அங்கு ஓடி வந்தது. பின்னர் அங்கிருந்த ராஜ நாகத்துடன் சண்டை போட தொடங்கியது. ஒரு கட்டத்தில் ராஜநாகத்தை கடித்துக் கொன்றது. இது தொடர்ப சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.