ராகுலுக்கு அதிகரித்து வரும் மக்களின் ஆதரவை பார்த்து பலர் நிலைகுலைந்து வருகிறார்கள் என்று முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்திருக்கின்றார்.
இந்திரா காந்திக்கு நேர்ந்தது விரைவில் உங்களுக்கு நேரும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு ஹிண்டே சிவசேனா கட்சியின் எம்எல்ஏ மிரட்டல் விடுத்திருந்தார். இதற்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் முதல்வர் மு க ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருந்ததாவது “பாஜக தலைவர் ஒருவர் ராகுல் காந்தி அவரது பாட்டிக்கு நேர்ந்த கதியை சந்திக்க நேரிடும் என்ற மிரட்டலுக்கும், ஹிண்டே சிவசேனா கட்சியின் எம்எல்ஏ ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பதாக கூறிய மிரட்டல் பற்றி ஊடகத்தின் செய்திகளால் அறிந்து மிக வேதனை அடைந்தேன்.
எனது சகோதர ராகுலுக்கு மக்களின் ஆதரவு அதிகரிப்பது சிலரை நிலைகுலைய வைக்கின்றது. எதிர்க்கட்சித் தலைவருக்கு பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு விரைந்து செயல்பட வேண்டும், வன்முறை மற்றும் மிரட்டலுக்கு ஜனநாயகத்தில் இடமில்லை என்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்” என்று தனது சமூக வலைதள பக்கத்தின் மூலமாக ராகுல் காந்திக்கு ஆதரவையும் மத்திய அரசுக்கு வேண்டுகோளையும் வைத்திருக்கின்றார் முதல்வர் மு க ஸ்டாலின்.