---Advertisement---

லீவு கொடுக்காத மேனேஜர்… அலுவலகத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த பெண் ஊழியர்… தொடரும் அவலம்…!

Published on: September 27, 2024
---Advertisement---

மேனேஜர் லீவ் கொடுக்காத நிலையில் பெண் ஊழியர் ஒருவர் அலுவலகத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

உலகம் முழுவதும் தற்போது கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கம் வலுப்பெற்று வருகின்றது. ஊழியர்கள் நவீன அடிமைத்தனத்தில் சிக்கி வருகிறார்கள் என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதை உறுதிப்படுத்தும் வகையில் பணிச்சுமை காரணமாக ஏற்படும் மரணங்கள் தொடர்கதை ஆகிய வருகின்றது.

Task, Incentive Target, Apprisal போன்றவை ஊழியர்களை பிணைக்கும் சங்கிலிகளாக இறுகி வருகின்றது. கடந்த வாரம் புனேவின் எர்னெஸ்ட் யங் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 26 வயதான பெண் பனிசுமையால் தற்கொலை செய்து கொண்டார். அதைத்தொடர்ந்து உத்திர பிரதேச மாநிலத்தில் தனியார் வங்கியில் பணியாற்றிய வந்த பெண் ஊழியர் வேலையில் இருக்கும் போதே மன அழுத்தத்தில் சேரிலிருந்து சரிந்து விழுந்து உயிரிழந்தார்.

இதை தொடர்ந்து தற்போது மற்றொரு சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. தாய்லாந்தை சேர்ந்த 30 வயதான பெண் சிக்லீவ் வேண்டி மேனேஜரிடம் கேட்டிருக்கின்றார். ஆனால் மேனேஜர் லீவு கொடுக்காத நிலையில் மேனேஜர் முன்னையே நிலைகுலைந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

தாய்லாந்தில் சமுத் பிராகன் மாகாணத்தில் இயங்கி வரும் எலக்ட்ரானிக் பொருட்கள் தொடர்புடைய பிளான்டில் வேலை செய்து வந்த மே என்கின்ற 30 வயது பெண் ஊழியர் உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு இருக்கின்றார். கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி முதல் அவருக்கு உடல்நிலை மோசமான நிலையில் மெடிக்கல் சர்டிபிகேட்டை காட்டி தனக்கு லீவ் கொடுக்கும்படி கேட்டு இருக்கின்றார் .

அதைத்தொடர்ந்து செப்டம்பர் ஐந்து முதல் எட்டாம் தேதி வரை லீவு எடுத்துவிட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். டிஸ்டார்ஜ் ஆன பிறகு செப்டம்பர் 12ம் தேதி வரை ஓய்வுக்காக மேலும் இரண்டு நாட்கள் லீவு வேண்டும் என்று கேட்டு இருக்கின்றார். அதிக நாட்கள் லீவு எடுத்து விட்டதால் இனி லீவு கொடுக்க முடியாது என்று மேனேஜர் கூறி விட்டார்.

இதனால் வேலையை இழந்து விடுவோமோ என்ற அச்சத்தில் கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி மேனேஜரிடம் வந்து மெடிக்கல் சர்டிபிகேட்டை காட்டி விட்டு மீண்டும் வேலை செய்ய தொடங்கியிருக்கின்றார். வேலை ஆரம்பித்து 20 நிமிடத்திற்குள் சுயநினவை இழந்த அந்த பெண் மயங்கி கீழே விழுந்தார். தொடர்ந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அடுத்த நாளே அந்த ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

வடிவுக்கரசி நடிப்பில் உருவாகியுள்ள கிராண்மா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு புகைப்படம்.

வடிவுக்கரசியின் மிரட்டலான ‘கிராண்மா’ ரிலீஸ் தேதி இதுதான்! தியேட்டருக்கு வரும் திகில் பாட்டி!

மங்காத்தா 2 அப்டேட் குறித்துப் பேசும் வெங்கட் பிரபு மற்றும் அஜித் புகைப்படம்.

கராத்தே பாபு டீசர் ரிலீஸ்! “யாரையும் குறி வச்சு எடுக்கல” – ரவி மோகன் படக்குழு திடீர் எச்சரிக்கை பின்னணி என்ன?

மங்காத்தா 2 அப்டேட் குறித்துப் பேசும் வெங்கட் பிரபு மற்றும் அஜித் புகைப்படம்.

மங்காத்தா 2 தயார்! ஆனா ஒரு கண்டிஷன்.. வெங்கட் பிரபு சொன்ன அந்த ஒரு வார்த்தை – அஜித் ரசிகர்கள் ஹேப்பி!

திரௌபதி 2 படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் இயக்குநர் மோகன் ஜி.

திரௌபதி 2: தடையை மீறி ரிலீஸாகுமா? நீதிமன்ற வழக்கு முதல் கத்தார் தடை வரை.. மோகன் ஜி-யின் அடுத்த அதிரடி!

2026 தமிழகத் தேர்தலில் Gen Z வாக்காளர்களின் தாக்கம் குறித்த வரைபடம் மற்றும் புகைப்படத் தொகுப்பு.

2026-ல் ‘கிங் மேக்கர்’ யார் தெரியுமா? தமிழக அரசியலைத் தீர்மானிக்கப்போகும் 1.2 கோடி Gen Z வாக்காளர்கள்!

சூர்யா 48 திரைப்படத்தின் இயக்குநர் மாற்றம் குறித்த செய்திப் புகைப்படம்.

சூர்யா 48-ல் திடீர் திருப்பம்! பாண்டிராஜுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்த சூர்யா.. ஹிட் கிடைக்குமா?