அமெரிக்காவிற்கு சலவை தொழிலாளியின் மகள் படிக்கச் செல்லும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
உத்திரபிரதேச மாநிலம் லக்னாவை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி தீபாளி கனோஜ்யா. வெளியுறவுத்துறை நிதி உதவியுடன் மேல் படிப்பை படிப்பதற்கான வாய்ப்பை பெற்றிருக்கின்றார். அதன்படி ஆகஸ்ட் 19ஆம் தேதி இவர் அமெரிக்காவுக்கு மேற்படிப்பிற்காக செல்ல இருக்கின்றார். தீபாளியின் தந்தை கால் அறுவை சிகிச்சைக்கு பிறகு படுத்த படுக்கையாக மாறிவிட்டார்.
தனது தந்தை படுத்த படுக்கையாக இருக்கும் நிலையில் வீட்டில் டியூஷன் நடத்தி தாய்க்கு உதவி செய்து வந்திருக்கின்றார் தீபாளி. ஒதுக்கப்பட்ட சமூகம் மற்றும் நலிந்த பொருளாதாரம் பின்னணியை சேர்ந்த பெண்களுக்கு கல்வி வழங்கும் ஸ்டடி ஹால் பிரிவில் தீபாளி சேர்ந்து படித்து வருகின்றார். இவருக்கு தற்போது அமெரிக்காவில் படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
இது தொடர்பாக பேசியவர் “இந்தியாவில் இருந்து இதற்கு தேவையான 30 மாணவர்களிலும் நானும் ஒருவர் என்பதை நினைக்கும் போது மிக மகிழ்ச்சியாக இருந்தது. எனது ஆசிரியர்களிடமிருந்து தான் அமெரிக்காவை பற்றி தெரிந்து கொண்டேன். பள்ளி படிப்பிற்காக அமெரிக்கா செல்வேன் என்று நினைத்துக் கூட பார்த்ததில்லை.
எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது என்று மகிழ்ச்சியாக பேசினார். மேலும் தீபாளியின் தாயார் கூறியதாவது” என் மகளை அமெரிக்காவிற்கு அனுப்புவதற்கு சற்று பதட்டமாக இருந்தாலும் அவர் மேற்படிப்பிற்காக செல்கிறார்” என்பதை நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கின்றது என்று தெரிவித்திருந்தார்.