கொரோனாவால் கஷ்டம்… ஆனால் ஒரே நாளில் கோடீஸ்வரனாகிய ஓட்டுனர்!

கொரோனாவால் கஷ்டம்… ஆனால் ஒரே நாளில் கோடீஸ்வரனாகிய ஓட்டுனர்!

கொரோனா வைரஸ் பாதிப்பால் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு கொண்டிருந்த ஓட்டுனருக்கு லாட்டரி சீட்டில் 41 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது.

கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜிஜேஷ் கொரோத்தன். இவர் தனது குடும்பத்தோடு அபுதாபி சென்று அங்கே வாடகைக் கார் ஓட்டுனராக வேலை செய்து வருகிறார். கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்புக் காரணமாக எந்த வேலையும் இல்லாமல் வருவாயும் இல்லாமல் கஷ்டத்தில் இருந்த அவருக்கு ஒரே நாளில் 40 கோடி ரூபாய்க்கு அதிபதியாகியுள்ளார்.

ஜிஜேஷ் அரபு எமிரேட்ஸின் மாதாந்திர அபுதாபி ‘பிக் டிக்கெட் லாட்டரி’ சீட்டினை வாங்கியுள்ளார். இதற்கானக் குலுக்கல் கடந்த 3 ஆம் தேதி கொரோனா காரணமாக இணையத்தில் நடந்துள்ளது. குலுக்கலில் அவரது லாட்டரி எண்ணான 041779 க்கு 20 மில்லியன் த்ராம்ஸ் அதாவது இந்திய மதிப்பில் 41 கோடி ரூபாய் பரிசாக விழுந்துள்ளது. இதன் மூலம் ஒரே நாளில் அவர் 40 கோடிக்கு அதிபதியாகியுள்ளார்.

இந்நிலையில் அந்த பணத்தை வைத்துக் கொண்டு கார்களை வாங்கி வாடகைக்கு விடப்போவதாகவும், மகளின் படிப்புக்காக செலவு செயயப்போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.