பெண் மருத்துவர் கொலை… உளவியல் சோதனையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்…!

பெண் மருத்துவர் கொலை… உளவியல் சோதனையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்…!

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் இருக்கும் ஆர்ஜி கார் என்கின்ற அரசு மருத்துவமனையில் இரவு பணியில் ஈடுபட்டிருந்த முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் ஆடிட்டோரியத்தில் பிணமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் கடந்த ஒன்பதாம் தேதி நடைபெற்றது. அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.

இந்த கொலை தொடர்பாக போலீசார் மருத்துவமனையில் தன்னார்வ ஊழியராக பணியாற்றி வந்த சஞ்சய் ராய் என்பவரை கைது செய்திருக்கிறார்கள். தொடர்ந்து சஞ்சய்ராயை சிபிஐ விசாரணை செய்து வருகிறார்கள். இந்நிலையில் சஞ்சய்ராயை உளவியல் ரீதியான சோதனைக்கு சிபிஐ உட்படுத்தி இருக்கின்றது.

டெல்லி ஃபாரன் சிக்ஸ் சயின்ஸ் ஆய்வகத்தில் இருந்து வந்த உளவியல் நிபுணர்கள் சஞ்சய்ராயை முழுமையாக பரிசோதனைக்கு உட்படுத்தினார்கள். அப்போது சஞ்சய் ராய் தான் செய்த வெரிச்செயலை எந்தவித உணர்ச்சியும் வெளிப்படுத்தாமல் சர்வ சாதாரணமாக அவரிடம் விளக்கி இருக்கின்றார்.

சஞ்சய் ராயின் உளவியல் பரிசோதனையின் மூலம் உயிரிழந்த பெண் மருத்துவரின் பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் சஞ்சய் ராய் மிருகத்தை ஒத்த பாலியல் வக்கிரம் கொண்ட நபர் என்பது தெரிய வந்திருக்கின்றது. இந்த சம்பவம் நடந்த இரவு தான் நண்பர்களுடன் கொல்கத்தாவின் சிவப்பு விளக்கு பகுதிகளில் இரண்டு இடங்களுக்கு சென்றதாகவும் அதன் பின்னர் தன்னை தன் நண்பர்கள் மருத்துவமனையில் இறக்கிவிட்டு சென்றதாகவும் கூறினார்.

தூங்கலாம் என்று ஆடிட்டோரியத்திற்கு சென்றபோது அங்கு அந்த பெண் மருத்துவர் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போதுதான் அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒப்புக்கொண்டார். அதிகாலையில் சஞ்சய் ராய் ஆடிட்டோரியத்திற்கு செல்லும் சிசிடிவி காட்சிகளும் தற்போது கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த வாக்கு மூலத்தின் மூலமாக அவர்தான் இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றி இருக்கின்றார் என்பது தெரிய வந்திருக்கின்றது.