பெங்களூரு கே எஸ் ஆர் ரயில் நிலையத்தில் நேற்று இரவு ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து 150 பெட்டிகளில் 3 டன் பதப்படுத்தப்பட்ட இறைச்சி அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது. வித்தியாசமாக இருந்த இறைச்சியை பார்க்க ரயில் நிலையத்தில் மக்கள் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அவை அனைத்தும் நாய் இறைச்சி என்று புனித் தேர்ஹள்ளி என்ற பாதுகாவலரும் அவரது சகாக்களும் போலீசாரிடம் தெரிவித்தார்கள். மேலும் அவை பெங்களூரில் உள்ள ஹோட்டலுக்கு சப்ளை செய்யப்பட்டதாகவும் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்கள். அப்துல் ரசாக் என்ற டீலர் அதை விற்பதற்காக ஜெய்ப்பூரில் இருந்து கொண்டு வந்துள்ளதாக தெரிகின்றது.
ஆனால் தான் வரவழைத்தது ஆட்டு இறைச்சி தான் என்றும் தன்னிடம் ஆதாரம் இருப்பதாக அப்துல் ரசாக் மறுப்பு தெரிவித்துள்ளார். தன்னை பொய் வழக்கில் மாட்டி விடுவதற்கு இப்படி எல்லாம் குற்றம் சாட்டில் வருகிறார்கள் என்று அவர் தெரிவித்திருந்தார். உண்மையில் அது என்ன இறைச்சி என்று அறிய போலீசார் அதனை பரிசோதனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.