3 மாத குழந்தை முதுகில் அனுமன் போல் 15 செ.மீ வால்… போராடி நீக்கிய மருத்துவர்கள்…!

3 மாத குழந்தை முதுகில் அனுமன் போல் 15 செ.மீ வால்… போராடி நீக்கிய மருத்துவர்கள்…!

மூன்று மாத கைக்குழந்தையின் முதுகில் இருந்த வாலை அறுவை சிகிச்சை மூலமாக மருத்துவர்கள் வெற்றிகரமாக நீக்கி இருக்கிறார்கள்.

தெலுங்கானாவில் உள்ள எய்ம்ஸ் பிபீநகரில் இருக்கும் மருத்துவர்கள் மூன்று மாத குழந்தையின் வாலை அகற்றும் அரியவகை அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்திருக்கிறார்கள். கடந்த ஜனவரி மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த அறுவை சிகிச்சையில் குழந்தையின் லும்போசாக்ரல் பகுதியில் அமைந்திருக்கும் 15 சென்டிமீட்டர் வால் அகற்றப்பட்டுள்ளது.

இந்த அறுவை சிகிச்சையானது உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான 40 அறுவை சிகிச்சைகளில் ஒன்றாகும். தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ஆண் குழந்தை ஒன்றுக்கு 15 சென்டிமீட்டர் நீளமுள்ள மனித வால் என்பது லும்போசாக்ரட் என்ற பகுதியில் இருந்து வெளியேறி பிறந்தது. இது ஒரு அரிய வகை குறைபாடு ஆகும்.

இது தவிர குழந்தைக்கு S1 மற்றும் S5 என்கின்ற முதுகெலும்,பு முதுகெலும்பு நோய்க்குறி ஆகியவற்றுடன் தொடர்புடைய முதுகெலும்பு டிபார்டிசம் என்ற பிரச்சனையும் இருந்தது. இது அறுவை சிகிச்சையை மேலும் சிக்கலாக்கி இருந்தது. இருப்பினும் மருத்துவர்கள் இந்த அறுவை சிகிச்சையை இரண்டரை மணி நேரம் மேற்கொண்டு வாலை அகற்றி குழந்தையின் முதுகெலும்பை சரி செய்து இருக்கின்றார்கள்.

ஐந்து நாட்களுக்கு பிறகு குழந்தை நரம்பியல் குறைபாடுகள் இல்லாமல் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அறுவை சிகிச்சைக்கு பிறகு குழந்தை காயம் மாறியதோடு சிக்கல் எதுவும் ஏற்படாமல் இருந்துள்ளது. தற்போது குழந்தையின் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.