கட்டுப்பாட்டை இழந்த பேருந்து… பைக், கார் மீது மோதிய அதிர்ச்சி… வெளியான சிசிடிவி காட்சிகள்…!

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து… பைக், கார் மீது மோதிய அதிர்ச்சி… வெளியான சிசிடிவி காட்சிகள்…!

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒன்று பை, கார்கள் மீது மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. பெங்களூர் விமான நிலையத்திலிருந்து எச்எஸ்ஆர் லேஅவுட்டுக்கு சென்று கொண்டிருந்த வால்வோ பேருந்து ஒன்று திடீரென்று தனது கட்டுப்பாட்டை இழந்தது.

இதனால் சாலையில் சென்று கொண்டிருந்த பைக் மற்றும் கார்கள் மீது சரமாரியாக மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் நான்கு பேர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது தொடர்பாக  வழக்கு பதிவு செய்த பெங்களூரு போலீஸ் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.