பனிச் சுமை காரணமாக மகாராஷ்டிராவை சேர்ந்த அன்னா செபாஸ்டியன் என்ற பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் எர்னெஸ்ட் அண்ட் யங்கு என்ற நிறுவனத்தில் பணியாற்றி வந்த 26 வயதான இளம் பெண் பனிச்சுமை காரணமாக அதிக அழுத்தம் ஏற்பட்ட கடந்து ஜூலை 20-ம் தேதி விடுதியில் உயிரிழிந்தார். இவரின் உயிரிழப்பு கார்ப்பரேட் ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
கார்ப்பரேட் கலாச்சாரத்தால் வேலை நேரம் மற்றும் பணி சுமையால் அதிக இளைஞர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள். இந்நிலையில் அன்னா செபாஸ்டியன் மரணம் தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்திருக்கின்றார். சென்னை மருத்துவக் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவர்களிடையே பேசிய நிர்மலா சீதாராமன் கூறியதாவது ‘நமது பிள்ளைகள் கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்களிலும் வீட்டை விட்டு வெளியேறி விடுதியில் தங்கி படித்து வருகின்றன.
சிஏ படித்த பெண் ஒருவர் நிறுவனம் ஒன்றில் பனி சுமையை சமாளிக்க முடியாமல் இறந்ததாக சமீபத்தில் செய்தி வெளியானது. நீ என்ன வேலை செய்தாலும் மனதில் ஏற்படும் எவ்வளவு பெரிய அழுத்தத்தையும் எடுத்துக் கொள்ளக்கூடிய சக்தி உன் உள் வரவேண்டும். அது தெய்வீக மூலமாக தான் நடக்கும் இறைவனை நம்பு இறைவனை நாடு எனப் பெற்றோர்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
ஆன்மீக சக்தி வளர்ந்தால் தான் அழுத்தத்தை தாங்கும் அளவுக்கு இன்னர் ஸ்ட்ரென்த் வளரும் என்று பேசியிருந்தார். இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பெரும் கண்டனத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. உயிரைப் பறிக்கும் விஷத்தன்மை உடைய பணியிட சூழல்களை ஒழுங்குபடுத்துவதை விட்டுவிட்டு ஊழியர்கள் எவ்வளவு பணி சுமையையும் கடவுள் நம்பிக்கை இருந்தால் சரி செய்து விடலாம் என்று நிதி அமைச்சர் பேசியிருப்பதை நியாயமற்றது’ என்று காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.