ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் ஒப்படைத்த கெஜ்ரிவால்… ஆட்சி அமைக்க உரிமை கோரும் அதிஷி…!

ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் ஒப்படைத்த கெஜ்ரிவால்… ஆட்சி அமைக்க உரிமை கோரும் அதிஷி…!

டெல்லி முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவால் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் ஒப்படைத்தார். இதை ஆட்சியமைக்க உரிமை கோரி அதிசய மனு கொடுத்திருக்கின்றார்.

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான சிபிஐ வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த ஜூன் 26 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் கடந்த 13ஆம் தேதி உச்சநீதிமன்றம் அவரை ஜாமினில் விடுதலை செய்தது. அதே நாளில் அவர் திகார் சிறையில் இருந்து விடுதலையானார்.

கடந்த 15ஆம் தேதி ஆம் ஆத்மி நிர்வாகிகளிடையே பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் 48 மணி நேரத்திற்குள் ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்தார். மக்கள் தீர்ப்பளிக்காமல் மீண்டும் முதல்வர் நாற்காலியில் நான் அமரப்போவது இல்லை என்று சூளுரை திறக்கும் கெஜரிவால் சட்டமன்றத் தேர்தலை வரும் நவம்பர் மாதமே நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கின்றார்கள்.

மேலும் எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தப்பட்டு ஒரு மூத்த தலைவர் முதல் மந்திரியாக தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று டெல்லி துணைநிலை ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கி இருக்கின்றார். இன்று மதியம் அதிஷி மற்றும் மணீஷ் சிசோடியா உடன் ஆளுநர் மாளிகைக்கு சென்ற அரவிந்த் கெஜ்ரிவால் வி கே சக்சேனாவிடம் தனது ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்து இருந்தார்.

இதை அடுத்து இன்று காலை ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அடுத்த தேர்தல் வரும் வரை கல்வித்துறை அமைச்சரான அதிஷி டெல்லி முதல்வர் பதவிக்கு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து ஆட்சி அமைக்க சக்சேனாவிடம் அதிஷி உரிமை கோரி இருக்கின்றார்.