டீயை வீட்டுக்கே டோர் டெலிவரி… லட்சக்கணத்தில் சம்பாதிக்கும் டீ வியாபாரி…!

டீயை வீட்டுக்கே டோர் டெலிவரி… லட்சக்கணத்தில் சம்பாதிக்கும் டீ வியாபாரி…!

டீயை டோர் டெலிவரி செய்து வியாபாரி ஒருவர் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகின்றார். மகாராஷ்டிரா மாநிலம், தாராசிவ் என்ற பகுதியை சேர்ந்த மகாதேவ் ஞானமாலி என்பவர் டீக்கடை ஒன்றை நடத்தி வருகின்றார். டீ வியாபாரியான இவர் டோர் டெலிவரி செய்வதன் மூலம் நாள் ஒன்றுக்கு பத்தாயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கின்றாராம்.

வெறும் மூன்றாம் வகுப்பு படித்திருக்கும் ஞானமாலி கடந்த 20 வருடங்களாக  டீ வியாபாரம் செய்து வருகின்றார். ரூபாய் ஐந்துக்கு டீ விற்பனை செய்து வந்த இவர் தனது கிராமத்தை சுற்றி இருக்கும் பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் செல்போன் மூலம் ஆர்டர் எடுத்து அதனை சரியான நேரத்தில் வீடுகளுக்கு சென்று வழங்குவதால் மக்களும் ஆர்வத்துடன் இவரிடம் டீ வாங்கி வருகிறார்கள்.

இப்பகுதியில் சுமார் 15,000 தேவையை தினமும் இவர் பூர்த்தி செய்வதால் 50 முதல் 60 லிட்டர் வரை அவருக்கு பால் தேவைப்படுகின்றதாம். இவரின் மனைவி மற்றும் இரண்டு மகன்களின் உதவியுடன் இந்த வேலையை செய்து வருவதாக தெரிவித்து இருக்கின்றார் ஞானமாலி.