நீட் தேர்வு முறைகேடு தொடர்பான செய்தி நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இது நாட்டின் அரசியல் மற்றும் சமூக சூழலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. குஜராத்தில் நீட் தேர்வில் சாதனை படைத்த மாணவி பிளஸ் டூ பொதுத்தேர்வில் பெயில் ஆகி இருக்கின்றார்.
அது மட்டும் இல்லாமல் அதற்கு நடத்தப்பட்ட மறுதேர்விலும் பெயில் ஆகி இருக்கின்றார். கடந்த மே ஐந்தாம் தேதி மருத்துவ படிப்புக்கான இளநிலை நீட் தேர்வு நாடு முழுவதும் நடத்தப்பட்டது. அந்த தேர்வின் முடிவுகள் கடந்த ஜூன் நான்காம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் குஜராத் மாநிலம் அகமதாபாத் சேர்ந்த மாணவி ஒருவர் 720 மதிப்பெண்ணுக்கு 705 மதிப்பெண்களை பெற்றிருந்தார்.
ஆனால் அவர் கடந்த மார்ச் மாதம் எழுதிய +2 தேர்வில் பெயில் ஆகி இருக்கின்றார். அவர் பிளஸ் டூ தேர்வில் அறிவியல் பாடத்தில் பெயில் ஆகியுள்ளார். அதற்காக அவர் மறுத்தேர்வு எழுதப்பட்ட போதிலும் அதிலும் பெயில் ஆகி இருக்கின்றார். மறு தேர்வில் அறிவியல் பாடங்களான இயற்பியலில் 22 மதிப்பெண்களும், வேதியலில் 33 மதிப்பெண்கள் மட்டுமே அவர் எடுத்திருக்கின்றார்.
https://twitter.com/Avdheshyadavsp/status/1800148082455425252
ஆனால் நீட் தேர்வில் 720க்கு 705 மதிப்பெண்களை எடுத்திருந்தார். இது எப்படி என்று கேள்வி எழுந்தது. இந்த வருட நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு ஏற்பட்டு பல்வேறு முறைகேடுகள் நடந்தது குறிப்பிடத்தக்கது.