2000 ரூபாய் நோட்டுக்கள் இன்னும் இவ்வளவு புழக்கத்தில் இருக்கா…? ரிசர்வ் வங்கி வெளியிட்ட புது தகவல்…!

2000 ரூபாய் நோட்டுக்கள் இன்னும் இவ்வளவு புழக்கத்தில் இருக்கா…? ரிசர்வ் வங்கி வெளியிட்ட புது தகவல்…!

2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவது தொடர்பாக முக்கிய அறிவிப்பை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டு இருக்கின்றது.

இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக கடந்த மே மாதம் ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. இதை எடுத்து 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்று வருகின்றன. இந்த அறிவிப்பு வெளியாகி ஒரு ஆண்டுகள் கடந்த நிலையில் 97 சதவீதத்திற்கும் அதிகமான 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு தெரிவித்திருந்தது. இது மக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் ஆயிரம் ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக புதிதாக 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. இதையடுத்து இந்த நோட்டுகள் அனைத்தும் புழக்கத்திற்கு வந்தது.

கடந்த மே 19ஆம் தேதி 2000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அப்போது புழக்கத்தில் இருந்து 2000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு 3.56 லட்சம் கோடி, இது ரூபாய் 7,961 கோடியாக குறைந்தது. வங்கி ஒழுங்குமுறை ஆணையம் மே 19, 2023 அன்று புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவோம் என்று அறிவித்திருந்தது.

இந்நிலையில் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறப்பட்டுள்ள நிலையில் ரிசர்வ் வங்கி புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. “கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் ஏழாம் தேதி வரை அனைத்து வங்கிகளிலும் 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டன. அதன்படி 97.92 சதவீதம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளது. இன்னமும் 7409 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் மக்களிடையே புழக்கத்தில் உள்ளது” என தெரிவித்துள்ளது