கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இதில் 12 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
டெல்லி கரோல் பாக்கில் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் 3 பேர் உயிரிழந்த நிலையில் 12 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டிருக்கிறார்கள். போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த பணியாளர்கள் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்
இந்த சம்பவம் தொடர்பாக காலை 9 மணிக்கு தகவல் கிடைத்ததும் டெல்லி தீயணைப்பு துறையினர் 5 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு சென்று விட்டார்கள். இதுவரை குறைந்தது 12 பேர் மீட்கப்பட்டிருக்கிறார்கள். இன்னும் பலர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள். தேசிய தலைநகரான டெல்லியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இந்த விபத்து ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகின்றது.