மேகதாது அணை வந்தால் தமிழகத்திற்கு தான் அதிக பயன் என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே சிவகுமார் தெரிவித்திருக்கின்றார்.
பருவ மழை காரணமாக கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களிலும் இந்த முறை சாதகமான சூழ்நிலை உருவாகி இருக்கின்றது என்று கர்நாடக துணை முதல்வர் டி கே சிவகுமார் தெரிவித்திருக்கின்றார். மேலும் கர்நாடக மாநிலத்தில் மேகதாது அணை திட்டம் வந்தால் தமிழகம் ஆதாயம் அடையும் என்று கூறி இருக்கின்றார்.
தமிழகத்திற்கு வந்திருக்கும் டி கே சிவகுமார் சென்னை சேத்துப்பட்டியில் உள்ள இயற்கை எரிவாயு உற்பத்தி மையத்தை பார்வையிட்டார். பின்னர் அதன் செயல்பாடுகளை கேட்டு அறிந்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டி கே சிவகுமார் “மேகதாது அணை தமிழ்நாடு அணை கட்டினால் கர்நாடகாவை விட தமிழகம்தான் பயன்பெறும்.
தற்போது போதுமான அளவு மழை பெய்துள்ளது. இதன் காரணமாக மேகதாது அணை குறித்து பேச வேண்டிய அவசியம் இல்லை. இரண்டு மாநிலத்திற்கும் வருண பகவான் உதவுவார். சென்னையில் உள்ள துப்புரவு திட்டம் என்னை வெகுவாக ஈர்த்து இருக்கின்றது. இதற்காக நான் அரசாங்கத்திற்கும், ஒட்டுமொத்த அதிகாரிகள் குழுவிற்கும் வாழ்த்து தெரிவித்தேன். அவர்களின் வித்தியாசமான அணுகுமுறையை வரவேற்கிறேன். இந்த வருகை எங்கள் அனைவருக்கும் ஒரு நல்ல கற்றல் செயல்முறையாக இருந்தது” என்று தெரிவித்திருந்தார்.











