நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மலை பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பள்ளிகள் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம், வயநாட்டில் கடந்த ஜூலை மாதம் 30 ஆம் தேதி பெய்த கனமழை காரணமாக தொடர்ச்சியாக நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவின்போது மண்ணுக்குள் ஏராளமான வீடுகள் புதைந்து போனன அதில் இருந்தவர்கள் மற்றும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்கள் என்று 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தார்கள்.
ஏராளமானவர்கள் காயம் அடைந்தனர். இந்த நிகழ்வில் பாதிக்கப்பட்டவர்கள் பலர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள். இதற்காக வயநாடு மாவட்டம் மேப்படி, முண்டகை உள்ளிட்ட பல பகுதிகளில் பள்ளிகள் நிவாரண முகாம்களாக செயல்பட்டது. இதனால் நிவாரண முகாம்களில் தங்கி இருந்தவர்கள் அரசு ஏற்பாடு செய்த வீடுகளுக்கு மாத தொடங்கி இருக்கிறார்கள்.
இதை தொடர்ந்து பல பள்ளிகள் கடந்த 27ஆம் தேதி முதல் செயல் பட தொடங்கி இருக்கின்றது. அங்கு வகுப்புகள் தொடங்கப்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். இந்நிலையில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முண்டகை மற்றும் சூரல்மலைப்பகுதியை சேர்ந்த 2 பள்ளிகள் மேப்பாடியில் கிராம பஞ்சாயத்து சமுதாய கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தற்காலிக இடங்களில் இன்று செயல்பட்ட தொடங்கி இருக்கின்றது. அங்கு சென்று மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பாடம் பயின்று வருகின்றனர்.