புதுச்சேரி மாநிலத்தில் மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டு உபயோகத்திற்கு 200 யூனிட் வரை மானியம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
புதுச்சேரி மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது “புதுச்சேரி மின் சட்டம் 2003 பிரிவு 55 விதிகள் படி வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு அரசு மானியம் வழங்கப்பட்டுள்ளது. முதல் 100 யூனிட்டுக்கு 45 பைசாவும், 101 யூனிட் முதல் 200 யூனிட் வரை பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு ஒரு யூனிட்டுக்கு 40 பைசாவும் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 16ஆம் தேதி முதல் இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 21 முதல் 300 யூனிட் வரை ரூபாய் 6-ம், 300 யூனிட்டுக்கு மேல் 7.50 என்ற கட்டணம் அப்படியே தொடரும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது நடைமுறையில் உள்ள மாதம் 100 யூனிட் மின்சாரம் உபயோகப்படுத்தப்படும் நுகர்வோர்களுக்கு 50% வரை அரசு மானியம் தொடரும்.
அதேபோல் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் மின்சாரம் முழுவதும் இலவசமாக வழங்கப்படும் 300 யூனிட்டுக்கு மேல் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் ஒவ்வொரு யூனிட்டு இருக்கும் 7.50 ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 300 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கப்படும் மின்சாரத்திற்கு 9.65 ரூபாய் வசூல் செய்யப்படுகின்றது. 400 யூனிட்டுக்கு மேல் சென்றால் 10.75 ரூபாயும், 500 யூனிட்டுக்கு மேல் சென்றால் 11.90 ரூபாயும் கட்டணமாக வரிசையில் செய்யப்படுகின்றது.
இதை ஒப்பிடுகையில் புதுச்சேரிகளில் வீட்டு உபயோகத்திற்கு மின் கட்டணம் குறைவாகவே இருக்கின்றது. மேலும் அமைச்சர் நமச்சிவாயம் தனது அறிக்கை தமிழக மின் கட்டணத்தை அட்டவணையாக வெளியிட்டு ஒப்பீடு செய்து புதுச்சேரியில் கட்டணக்குறைவு என்று குறிப்பிட்டுள்ளார். இந்திய கூட்டணி கட்சியினர் மின்கட்டணத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.











