Connect with us

வெள்ளம் பாதித்த பகுதி… ஜேசிபியில் சென்று ஆய்வு செய்த சந்திரபாபு நாயுடு… வைரல் வீடியோ…!

Latest News

வெள்ளம் பாதித்த பகுதி… ஜேசிபியில் சென்று ஆய்வு செய்த சந்திரபாபு நாயுடு… வைரல் வீடியோ…!

வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஜேசிபியில் சென்று ஆய்வு செய்த வீடியோ வைரலாகி வருகின்றது.

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திராவில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. அதிகாரிகளின் அறிவுறுத்தலை மீறி வெள்ளம் பாதித்த இடங்களுக்கு படகுகளில் சென்று சந்திரபாபு நாயுடு பார்வையிட்டார்.

இந்நிலையில் இன்று ஆந்திராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விஜயவாடா பகுதிகளை ஜேசிபியில் சென்று சந்திரபாபு நாயுடு நேரில் ஆய்வு செய்தார். மழை வெள்ளம் காரணமாக சென்னையில் இருந்து ஆந்திரா மார்க்கமாக செல்லக்கூடிய ரயில்கள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றது. சென்னையில் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்தில் இருந்து செல்லக்கூடிய 18 ரயில்களை ஏற்கனவே நிர்வாகம் ரத்து செய்திருந்தது.

கனமழையால் ஆந்திராவில் பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டிருக்கின்றது. மேலும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 20க்கும் மேற்பட்டோர் ஆந்திராவில் உயிரிழந்திருக்கிறார்கள். அவர்களுக்கு தலா ஐந்து லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று சந்திரபாபு நாயுடு நேற்று அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு சென்று சந்திரபாபு நாயுடு நேரில் ஆய்வு செய்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

More in Latest News

To Top