இந்தியாவில் கொரொனாவின் கோரம் கட்டுக்குள் அடங்காமல் காட்டுதீப் போல பரவிக் கொண்டு வருகின்றது. இதனையடுத்து, தமிழகத்தில் இன்று மேலும் 231 பேருக்கு கொரொனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று 174 பேருக்கும், அரியலூரில் 18, காஞ்சிபுரத்தில் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து இன்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் சுமார் 231 பேருக்கு நோய் தொற்று இருப்பதை சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. நேற்றைய தினம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,526 இருந்த நிலையில், இன்றைய தினமான மே 2ஆம் தேதி, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,757 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில், கொரோனா பாதித்த மாவட்டங்கள் வாரியான எண்ணிக்கை பட்டியல் உங்கள் பார்வைக்கு:
