இந்தியா முழுவதும் தங்கத்தின் மீதான மோகம் எப்போதுமே இருந்து வருகிறது. ஆபரணமாக பார்க்க படுவதோடு மட்டுமல்லாமல், வணிக ரீதியாகவும் இருந்து வருவதனால் தான் இன்றும் தங்கம் என்பது சிலருக்கு எட்டாக் கனியாகாவே இருந்து வருகிறது. ஒரு புள்ளி விவர தகவலின் படி சீனாவிற்கு அடுத்த படியாக இந்தியா தான் தங்கத்தின் மீது அதிக கவனம் செலுத்தும் நாடாக இருந்து வருகிறது உலக நாடுகளின் வரிசையில்.
இந்த வாரத்துவக்கத்தில் சரிந்து வந்த இருபத்தி இரண்டு கேரட் ஆபரண்த்தங்கத்தின் விலை கடந்த மூன்று நாட்களாகவே உயரத்துவங்கியுள்ளது. தங்கத்தின் விற்பனை விலையில் நாளுக்கு நாள் மாற்றம் இருப்பது வாடிக்கையாகி விட்டது, சில நேரங்களில் வரலாறு காணாத விலை உயர்வையும் சந்தித்துள்ளது இதன் விலை. சென்னையில் தங்கத்தின் விற்பனை விலை நேற்றை விட இன்று சற்று அதிகரித்துள்ளது.

22கேரட ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ஆராயிரத்து அறனூற்றி என்பத்தி ஐந்து (ரூ.6,685/-)ரூபாயாக இருக்கிறது. அதே போல ஒரு சவரனின் விலை ஐம்பத்தி மூன்றாயிரத்து நானூற்றி என்பது (ரூ.53,480/-)ரூபயாகவும் இருக்கிறது. வெள்ளியின் விலையில் நேற்றை விட இன்று மாற்றம் ஏதுமில்லை. ஒரு கிராம் வெள்ளி தொன்னூற்றி நான் கு ரூபாய் ஐம்பது பைசாவிற்கு (ரூ.94.50/-) விற்கப்படுவது போல ஒரு கிலோ வெள்ளியின் விலை தொன்னூற்றி நான்காயிரத்து ஐனூறு ருபாய்க்கும் (ரூ.94,500/-) விற்கப்படுகிறது.
வார இறுதி நாட்களில் ஒன்றான இன்றைய தினம் தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் இருப்பது நகை முதலீட்டாளர்களையும், ஆபரண பிரியர்களையும் சற்று கலங்ககடிக்க செய்துள்ளது. அதே நேரத்தில் கடந்த வாரத் துவக்கத்தில் விலை குறைந்தது போல விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.