கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட வீடு – கமல் வீட்டின் முன் ஒட்டப்பட்ட போஸ்டரால் சர்ச்சை!

கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட வீடு – கமல் வீட்டின் முன் ஒட்டப்பட்ட போஸ்டரால் சர்ச்சை!

நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசனின் ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தின் முன்பு மாநகராட்சி போஸ்ரால் குழப்பம் உருவாகியுள்ளது.

மார்ச் 1 ஆம் தேதிக்குப் பின்னர் வெளிநாடு சென்று வந்தவர்களை இரு வாரங்களுக்கு தனிமைப்படுத்தும் விதமாக அவர்களின் வீடுகளில் தனிமப்படுத்த பட்ட வீடு என்பதை அறிவிக்கும் விதமாக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் ஸ்டிக்கரை ஒட்டப்பட்டது.

இந்நிலையில் இதுபோன்ற போஸ்டர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் கமலின் வீட்டின் முன் ஒட்டப்பட்டுள்ளதால சர்ச்சை உருவாகியுள்ளது. கமல், வெளிநாடுகளுக்கு எதுவும் சென்று வரவில்லை என்பதால் ஏன் அந்த போஸ்டர் அங்கு ஒட்டப்பட்டது என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் அந்த போஸ்டரில் உள்ள கையெழுத்திலும் சில குழப்பங்கள் உள்ளதாக சொல்லப்படும் நிலையில் அது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இது சம்மந்தமாக மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.