படப்பிடிப்புகள் நிறுத்தம்… பாதிக்கப்பட்ட தொழிலாளிகள் – சிவக்குமாரை பின்பற்றுவார்களா முன்னணி நடிகர்கள் ?

படப்பிடிப்புகள் நிறுத்தம்… பாதிக்கப்பட்ட தொழிலாளிகள் – சிவக்குமாரை பின்பற்றுவார்களா முன்னணி நடிகர்கள் ?

சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால் வேலை இழந்துள்ள சினிமா தொழிலாளர்களுக்கு உதவித்தொகையாக அளித்துள்ளார் நடிகர் சிவக்குமார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய் ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்றும் லட்சக்கணக்கானவர்களை பாதித்தும் வரும் சூழ்நிலையில் அது மேலும் பரவாமல் தடுகும் விதமாக மக்கள் பொது இடங்களில் கூடுவதைத் தவிர்க்க சொல்லப்பட்டது.  இதன் ஒரு கட்டமாக சினிமா படப்பிடிப்புகளும் கடந்த 19 ஆம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் சினிமாவில் தினக்கூலிகளாக இருந்து வரும் ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்களுக்கு உதவும் விதமாக நடிகர் சிவக்குமார் 10 லட்சம்  ரூபாய் உதவித்தொகையாக வழங்கியுள்ளார். இதை அவர், தமிழ் திரை தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர் கே செல்வமணியிடம் அளித்துள்ளார். இதுபோல மற்ற முன்னணி நடிகர்களும் உதவிக்கரம் நீட்டவேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்துள்ளன.