Entertainment
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை பரபரப்பு புகார்
முன்னாள் அதிமுக அமைச்சரவையில் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக இருந்தவர் மணிகண்டன். இராமநாதபுரத்தை சேர்ந்த இவர் மீது சினிமா நடிகை ஒரு புகார் தெரிவித்துள்ளார்.
நாடோடிகள் படத்தில் நடித்த நடிகை சாந்தினி தேவாதான் இந்த புகாரை அளித்துள்ளார். அந்த படத்தில் இளம் காதலர்களாக வருமே ஒரு ஜோடி அதுதான் சாந்தினி தேவா.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அவர் தெரிவித்துள்ள புகாரில் திருமணம் செய்வதாக ஏமாற்றி கருவை கலைத்து துன்புறுத்தினார்.
5 ஆண்டுகள் தன்னை கொடுமைப்படுத்தியதாக அவர் புகார் அளித்துள்ளார்.