Corona (Covid-19)
இந்தியாவில் 6 மாதங்களுக்குள் தடுப்பூசி
டெல்லியில் நேற்று உயர்மட்ட மத்திய அமைச்சர்கள் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் கூறியதாவது, கொரோனா வைரஸ் பாதிப்பின் வேகம் 2 விழுக்காடாகவும்,இறப்பு விகிதம் உலகிலேயே மிக குறைந்த அளவாக ஒன்று புள்ளி 45 விழுக்காடாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அனைவரும் தனி மனித இடைவெளி, மாஸ்க் அணிவது போன்றவற்றை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா இந்தியாவில் கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறியுள்ள அமைச்சர், வரும் 7 மாதங்களுக்குள் 30 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என தெரிவித்துள்ளார்.