Corona (Covid-19)
ஊரடங்கால் வீட்டில் இருக்கும் இந்தியர்கள்! அதிகமாகப் பார்ப்பது இதைதான்!
ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின் ஆபாசப் படங்களை அதிகமாக பார்க்கும் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாகவும் அதிலும் இந்தியர்கள் முதலிடத்தில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுததால் உலகம் முழுக்க பல்வேறு நாடுகள் வீட்டில் முடங்கியுள்ளது. ஆனாலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்னிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனை எண்ணி பல்வேறு நாட்டு மக்கள் மிகுந்த விழிப்புணர்வுடனும், பாதுகாப்புடனும் இருந்து வருகின்றனர். வீட்டிலேயே முடங்கிக் கிடப்பவர்களுக்கு பொழுதுபோக்காக மொபைல் போன்களும், தொலைக்காட்சிகளும் இணையமுமே இருந்து வருகின்றன.
அதில் தங்களுக்கு விருப்பபப்பட்ட நிகழ்ச்சிகளைப் பார்த்து வருகின்றனர். ஆனால் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின் அதிகளவில் ஆபாசப்படங்கள் பார்ப்பவர்களின் எண்ணிக்கைதான் உலகளவில் அதிகமாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதிலும் குறிப்பாக இந்தியர்கள்தான் அதிகளவில் ஆபாசப்படம் பார்ப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கும் இந்தியாவில் ஆபாசப்படங்களைப் பார்க்கும் இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் பிராக்ஸி மூலம் படங்களைப் பார்ப்பதாக சொல்லப்படுகிறது.