Latest News
அஞ்சனாத்ரி மலையில் ஆஞ்சநேயர் அவதரித்தாரா- ஆய்வு செய்ய உத்தரவு
திருப்பதியில் உள்ளது அஞ்சனாத்ரி மலை. இது சேஷாத்ரி மலைத்தொடரில் உள்ளது இந்த மலைத்தொடரில் சேஷாத்ரி,அஞ்சனாத்ரி, நாராயணாத்ரி, விருஷபாத்ரி, கருடபாத்ரி, வேங்கடாத்ரி, நீலாத்ரி ஆகிய ஏழு மலைகள் உள்ளன. இதில் அஞ்சனாத்ரி மலையில்தான் அஞ்சனாதேவி நீண்ட காலம் தவமிருந்து ஆஞ்சநேயரை மகனாக பெற்றார் என்பது புராணங்கள் கூறும் கதை.
இங்கு ஆஞ்சநேயரின் மிகப்பெரிய சிலையும் உள்ளது. அஞ்சனாத்ரி மலையில் ஆஞ்சநேயர் அவதரித்தாரா என்பது குறித்து திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் அஞ்சனாத்ரி மலையில் மிகப்பெரும் கோவில் கட்ட தேவஸ்தானம் ம்டிவு செய்துள்ளதாம்.