தமிழ் விளையாடு செய்திகள்
அம்பையரிடம் வாக்குவாதம்… ஹெல்மட்டை வீசி எறிந்த விக்கெட் கீப்பர்… நடந்தது என்ன…?
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் எடுத்திருந்தது. இந்த அணியில் அதிகபட்சமாக பெர்னான்டோ மற்றும் கமென்ட் மெண்டிஸ் இருவரும் 40 ரன்கள் அடித்திருந்தார்கள். இந்தியா சார்பில் அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெடுகளை வீழ்த்தி இருந்தார்.
பின்னர் 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா விளையாடியது. இந்தியாவின் கேப்டன் ரோகித் சர்மா தொடக்கத்தில் அதிரடியாக விளையாடி 64 ரன்களை குவித்தார். ஆனால் சுபன் கில் 35 ரன்கள், விராட் கோலி 14, சிவம் துபாய் 0, ஸ்ரேயாஸ் ஐயர் 7, கே எல் ராகுல் 0 என்ற ரண்களில் தொடர்ந்து அவுட் ஆக இந்தியாவுக்கு பின்னடைவு ஏற்பட்டது. ஆனால் மிடில் ஆர்கிடில் அக்சர் பட்டேல் 44 ரன்கள் அடித்து போராடி 42.2 202 ரன்களில் ஆல் அவுட் ஆகி தோல்வியை சந்தித்தனர்.
சிறப்பாக பந்து வீசி வெற்றி கண்ட இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக ஜெப்ரி வாண்ட்ர்சே 6 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். இதற்கிடையில் விராட் கோலி 11 ரன்கள் எடுத்திருந்தபோது அகிலா தனஞ்செயா வீசிய பந்தில் எல் பி டபிள்யூ ஆனார். இதற்கு இலங்கை வீரர்கள் அவுட் கேக்க களத்தில் இருந்த நடுவர் அவுட் வழங்கினார். ஆனால் இதனை ஏற்றுக் கொள்ளாத விராட் கோலி மூன்றாம் நடுவரின் உதவியை கேட்டார். அப்போது டிஆர்எஸ் பயன்படுத்தி இது அவுட்டா இல்லையா என்று பார்க்கப்பட்டது.
ரீப்ளைவில் பந்து பேட்டில் பட்ட பிறகு தான் விராட் கோலியின் காலில் பட்டது என தெரிந்தது. இதனால் மூன்றாம் நடுவர் இது அவுட் இல்லை என்று கூற களநடுவரும் தனது முடிவை மாற்றினார். இதையடுத்து களத்தில் இருந்த நடுவர் இதை அவுட்டில்லை என்று கூறினார். இதனால் இலங்கை வீரர்கள் அதனை ஏற்றுக் கொள்ளாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
https://twitter.com/HiriAzam/status/1820106180116533422
விராட் கோலி அவுட் என்று கூறி கேப்டன் நடுவரிடம் முறையிட்டார் நடுவர் இது அவுட் இல்லை என்று விளக்கி கூறினார். இருப்பினும் இலங்கை வீரர்கள் ஒப்புக்கொள்ளாமல் தங்களது விரக்தியை வெளிப்படுத்துகிறார்கள். இதில் இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் மெண்டல் தனது ஹெல்மெட்டை எடுத்து கோபத்தோடு வீசிய வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது.