இந்திய பேட்மிட்டன் வீரர் வெற்றி செல்லாது… ஒலிம்பிக்ஸ் கமிட்டியின் முடிவு… வலுக்கும் கண்டனம்..!

இந்திய பேட்மிட்டன் வீரர் வெற்றி செல்லாது… ஒலிம்பிக்ஸ் கமிட்டியின் முடிவு… வலுக்கும் கண்டனம்..!

ஒலிம்பிக் போட்டிகள் கடந்த சனிக்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. தொடக்க ஆட்டத்தில் பல பிரிவுகளில் வீரர்கள் தங்களது திறமைகளை காட்டி வருகிறார்கள். அப்படி பேட்மிட்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் விளையாடிய இந்திய வீரர் லக்ஷ்யா சென் வெற்றி பெற்றிருந்தார்.

இந்த வெற்றி செல்லாது என்று ஒலிம்பிக் கமிட்டி நீக்கி இருப்பது விமர்சத்திற்கு உள்ளாகியுள்ளது பேட்மிட்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கடந்த சனிக்கிழமை நடந்த குரூப் எல் போட்டியில் கெவின் கார்டன் என்ற வீரருடன் விளையாடிய லக்ஷ்யா சென் 28-8, 22-20 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றிருந்தார்.

ஆனால் கெவின் கார்டன் தனது இடது காலில் ஏற்பட்ட காயத்தால் ஒலிம்பிக் போட்டியில் இருந்து தற்போது விலகி உள்ள நிலையில் அவருடன் நடந்த போட்டியில் லக்ஷ்யா சென் வெற்றி பெற்றது நீக்கப்பட்டு இருக்கின்றது. சர்வதேச பேட்மிட்டன் கூட்டமைப்பின் விதிகளின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஒலிம்பிக் கமிட்டி சார்பாக விளக்கம் கொடுக்கப்பட்டது.

எனவே லக்ஷ்யா சென் குரூப் எல் போட்டிகளில் பெறும் வெற்றியை பொருத்தே அவரது ரேங்கிங் வரிசை நிர்ணயிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதில் நியாயம் கிடையாது என்று பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.