இந்தியாவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வெளியே வருபவர்களை போலிஸார் அடிக்கும் வீடியோக்கள் வெளியாகி பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் அதை மதிக்காமல் அவ்வபோது வெளியே வருவதும் வாடிக்கையான ஒன்றாக இருந்து வருகிறது. அதுபோல வெளியே வருபவர்களை போலிஸார் அடித்துத் துவைக்கும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பையும் போலிஸார் மீது கோபத்தையும் ஏற்படுத்துகின்றன.
இதுபோல சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவர் வேலை இதுபோல வெளியே செல்ல, சத்யா எனும் காவலர் அவரை லத்தியால் அடிக்க, இது சம்மந்தமாக இருவரும் வாக்குவாதம் செய்யும் வீடியோ வெளியாகி வைரலானது. அதையடுத்து இப்போது காவலர் சத்யா மூர்த்தியிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ள வீடியோ வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில் மூர்த்தி ‘ நான் ஊரடங்கு உத்தரவை மீறியததால் அவர் என்னை அடித்தார். இது காவலர்களின் கடமை. எனவே இதனை பெரிது படுத்தாமல் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் இணைந்து செயல்படுவோம்’ எனக் கூறியுள்ளார்.

