சென்னை மேயராக 28 வயதேயான பிரியா என்பவர் கடந்த மாதம் பதவியேற்றார்.
பல விமர்சனங்களை கடந்து மேயராக பல பொறுப்புள்ள காரியங்களை செய்து வரும் இவர் இன்னும் சரியாக பேசக்கூட கூச்சப்படுகிறார் என விமர்சகர்களால் சொல்லப்படுகிறது.
இருந்தாலும் எல்லாவற்றையும் மீறி மேயராக பொறுப்புணர்வுடன் செயல்பட்டு வருகிறார்.
மக்களை எளிதில் தொடர்பு கொள்ள இவர் சமீபத்தில் டுவிட்டரில் இணைந்துள்ளார்.